புராணங்கள் சொல்லும் விஷயங்கள்! பதினெட்டு புராணங்கள்



1. பிரம்ம புராணம்
பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
~~~~~~~~~~~~~~~~
2. பத்ம புராணம்
காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~
3. பிரம்ம வைவர்த்த புராணம்
கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.
~~~~~~~~~~~~~~~
4. இலிங்கப் புராணம்
பரமசிவனுடைய வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச் சொல்கிறது.
~~~~~~~~~~~~~~~
5. விஷ்ணுப் புராணம்
விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது.
~~~~~~~~~~~
6. கருட புராணம்
கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.
~~~~~~~~~~~
7. அக்கினி புராணம்
அக்கினியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு உபதேசித்தது. மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக் குறிக்கிறது.
~~~~~~~~~~~ 
8. மத்ஸ்ய (மச்ச) புராணம்
பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன. சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள் இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது.
~~~~~~~~~~~
9. நாரத புராணம்
நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
~~~~~~~~~~~
10. வராஹ புராணம்
திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது.
~~~~~~~~~~~
11. வாமன புராணம்
வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது.
~~~~~~~~~~~
12. கூர்ம புராணம்
கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறது.
~~~~~~~~~~~
13. பாகவத புராணம்
விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.
~~~~~~~~~~~
14. ஸ்கந்த புராணம்
முருகப் பெருமானின் வரலாறு சொல்லப்படுகிறது.
~~~~~~~~~~~
15. சிவ புராணம்
சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
~~~~~~~~~~~
16. மார்க்கண்டேய புராணம்
மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம். அத்ரி, அனுசூயை முதலியோர் வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
~~~~~~~~~~ 
17. பிரும்மாண்ட புராணம்
பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
~~~~~~~~~~
18. பவிஷ்ய புராணம்
பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள். கலியுகத்தில் நடைபெறவிருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

Post a Comment

Previous Post Next Post